ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் வல்லுறவு! பாஜக எம்எல்ஏ மீதான எஃப்.ஐ.ஆர். விவரம்
4 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த தனியார் சிற்றுந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை காவல்துறையும், தீயணைப்புத் துறையும் மேற்கொண்டு வருகின்றன.