ஸ்ரீவில்லிபுத்தூரில் சிற்றுந்து விபத்து: 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் வல்லுறவு! பாஜக எம்எல்ஏ மீதான எஃப்.ஐ.ஆர். விவரம்

4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த தனியார் சிற்றுந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை காவல்துறையும், தீயணைப்புத் துறையும் மேற்கொண்டு வருகின்றன.

Related posts

Namakkal police have been arrested Kerala ATM robbers and one killed in police encounter.

UP: BJP Leader Princy Chauhan Accuses Toll Employee Of Misbehaviour; Stages Protest

‘Will Get Married For Such Gifts’: Netizens React To Couple Presented With Coldplay Tickets On Wedding Day; Video Viral