அடுத்தாண்டு நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அடுத்தாண்டு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
மத்திய காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 19 பேர் பலி
பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.7ல் தொடங்கி 14ஆம் தேதி முடிவடையும். அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறும்.
பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.15ல் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்.22 தொடங்கி பிப்.28ஆம் தேதி வரை நடைபெறும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதியும், பிளஸ் 1, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும்.
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.