12 மாவட்டங்களில் இன்று கனமழை!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. இதனால், வெயில் தணிந்து இதமான காலநிலை உருவாகியுள்ளது. இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயிலும், சிறு தூரலும் மாறி மாறி நிலவி வருகின்றது.

படிக்க: டபுள் ஆக்‍ஷன்: சிறு ஏடிஎம்களாக செயல்படவிருக்கும் ரேஷன் கடைகள்!

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

உள் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று (செப்.30) ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

நாளை (அக். 1) கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (அக். 2) ஒன்பது மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க: தீபாவளிக்குள் பள்ளமில்லாத சாலைகள்: முதல்வர் அதிஷி!

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024