Saturday, September 21, 2024

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்; ஜிம்பாப்வேயில் நடைபெற வாய்ப்பு..? – வெளியான தகவல்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்காளதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐ.சி.சி விரும்பவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.

இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி திட்டமிட்டது. ஆனால், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.

மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மகளிர் டி20 உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024