‘2029-ம் ஆண்டிலும் ‘இந்தியா’ கூட்டணி எதிர்க்கட்சிதான்’ – அமித்ஷா

சண்டிகர்,

அரியானா மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"2029-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சியாகவே இருக்க 'இந்தியா' கூட்டணி தயாராகிக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் என்ன செய்தாலும் சரி, 2029-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும், மோடி மீண்டும் வருவார்.

காங்கிரஸ் கட்சி 3 தேர்தல்களில் பெற்ற இடங்களை விட பா.ஜ.க. நடப்பாண்டு தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அரசு நிலையற்றது என சிலர் கூறி வருகின்றனர். அவர்களிடம் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்கள் அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்வது மட்டுமின்றி, அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.

2029-ம் ஆண்டிலும் 'இந்தியா' கூட்டணி எதிர்க்கட்சிதான். அவர்கள் எதிர்க்கட்சியின் வேலையை சரியாக செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி