3 மணிநேரத்தில் 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

pic.twitter.com/wXYJ6qm8sG

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 3, 2024

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அடுத்த 6 நாள்களுக்கு தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

You may also like

© RajTamil Network – 2024