Friday, September 20, 2024

473 ஆண்டுகளாக அணையாமல் எரியும் விளக்கு …. எங்க இருக்கு தெரியுமா?

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

473 ஆண்டுகளாக அணையாமல் எரியும் விளக்கு …. எங்க இருக்கு தெரியுமா?அணையா ஜோதி

அணையா ஜோதி

மக்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் அணையாவிளக்கை காண அனுமான் கோயிலில் குவியும் பக்தர்கள். இக்கோயில் எங்கு உள்ளது, இந்த கோவில் பற்றியும் அங்குள்ள அணையா ஜோதியை பற்றியும் வேறு சில முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்திரகூத்து என்ற பகுதியில் சக்தி வாய்ந்த அனுமான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகளை கடந்த கோயிலாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள அதிசயத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த கோயிலில் உள்ள விளக்கு ஒன்றை தவறுதலாக துளசிதாஸ் என்பவர் ஏற்றி வைத்ததாக உள்ளூர் வாசி ஒருவர் கூறுகிறார். அவர் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்று வரை அணையாமல் பிரகாசமாக எரிந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அணையா ஜோதியை பார்ப்பதற்காகவே பல பக்தர்கள் தொலைதூரத்தில் இருந்து இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Hindu Temple
,
Madhya pradesh

You may also like

© RajTamil Network – 2024