Friday, September 20, 2024

5-வது மாடியில் இருந்து விழுந்த நாய்… சிறுமியின் உயிரை பறித்தது

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

தானே,

மராட்டிய மாநிலம் தானேவில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமி மீது 5-வது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மும்ப்ரா பகுதியில் உள்ள பரப்பான சாலையில் 4 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 5-வது மாடியில் இருந்து திடீரென நாய் ஒன்று கீழே சென்று கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமி மீது நாய் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், நாய் எப்படி கீழே விழுந்தது. தானாக குதித்ததா? அல்லது தூக்கி எறியப்பட்டதா? என்பது தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாயை வளர்ப்பதற்கு உரிமையாளருக்கு அனுமதி இருந்ததா? அவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தனது மகளின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

#Thane: A dog fell on a 3-year-old girl from the 5th floor, the girl died, the entire incident in Mumbra was captured on CCTV.
The dog is a Golden Retriever, the dog is also injured.#Mumbai#Doglover#Maharashtra#Viral#Viralvideo#goldenretrieverpic.twitter.com/YvKd0jBwLc

— Siraj Noorani (@sirajnoorani) August 7, 2024

You may also like

© RajTamil Network – 2024