5-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் ஜோகோவிச்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஜோகோவிச் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

பெல்கிரேட்,

முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காலிறுதிக்கு முன்பாக விலகினார். இதனால் அடுத்த மாதம் பாரீசில் நடக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில் ஜோகோவிச், மற்றொரு செர்பிய வீரர் டுசன் லாஜோவிச் இருவரும் ஒலிம்பிக்கில் விளையாடுவதை செர்பிய ஒலிம்பிக் கமிட்டி நேற்று உறுதிப்படுத்தியது. ஜோகோவிச் ஒலிம்பிக்கில் ஆட இருப்பது இது 5-வது முறையாகும்.

You may also like

© RajTamil Network – 2024