Tuesday, September 24, 2024

7 வயது மகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்… காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சியில் பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் 7 வயது மகளான அதிசயா இரு நாள்களுக்கு முன் மாயமான நிலையில், அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, சிறுமியின் தாய் சத்யா தலைமறைவாக இருந்த நிலையில், பூட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரணடைந்தார். விசாரணையில், கணவருக்கு தெரியாமல் பலரிடம் கடன் பெற்ற சத்யா, கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. பணம் கொடுத்தவர்கள் தினமும் வீடு தேடி வந்த நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனால், கடன் விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என அவர் பயத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், குழந்தையை கொன்றுவிட்டால், அனுதாபத்தில் சிறிது காலத்திற்கு யாரும் கடன் கேட்டு நெருக்கடி தர மாட்டார்கள் என எண்ணி. குழந்தையை அவர் கொன்றது தெரியவந்திருக்கிறது. சத்யாவின் வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் கொடுத்தவர்கள் சிறிது காலத்திற்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்காக, பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தாயே கிணற்றில் தள்ளி கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024