Saturday, September 28, 2024

8 கி.மீ. தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த கர்நாடக போலீஸ் மோப்ப நாய்!

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

8 கி.மீ. தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய்! – கர்நாடகாவில் நடந்த அதிரடி சம்பவம்!8 கி.மீ. தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய்! - கர்நாடகாவில் நடந்த அதிரடி சம்பவம்!

கர்நாடகாவின் தாவண்கரேவில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரைப் பிடிப்பதில் உதவி செய்ததோடு, ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதிலும் ஒரு போலீஸ் நாய் முக்கியப் பங்கு வகித்துள்ளது. கனமழை பெய்து கொண்டிருந்த போதிலும் எட்டு கிலோமீட்டர் தூரம் ஓடி கொலைகாரனைக் கண்டுபிடிக்க உதவி செய்துள்ளது அந்த நாய்.

கர்நாடக மாநிலத்தின் சன்னகிரி தாலுகா, சந்தேபென்னூரில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே உள்ள படா சாலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ரோந்துக் குழுவினர் உடலைக் கண்டெடுத்து, உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

விளம்பரம்

இந்த செய்தியை கேட்ட எஸ்பி உமா பிரசாந்த், துங்கா 2 என்ற பெயர் கொண்ட போலீஸ் மோப்ப நாய் மற்றும் அதை கையாள்பவரான கான்ஸ்டபிள் ஷாபி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினார். டாபர்மேன் வகையைச் சேர்ந்த இந்த நாய், இறந்துகிடந்தவரின் சட்டையை முகர்ந்து பார்த்துவிட்டு, சன்னபுரத்தை நோக்கி விரைந்தது.

துங்கா 2 என்ற பெயருடைய அந்த நாயும், அதனை கையாள்பவரான போலீஸ் காவலரும் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் இடைவிடாமல் ஓடியுள்ளனர். அப்போது அந்த வழியில் இருந்த வீட்டிலிருந்து கனத்த சத்தம் வந்துள்ளது. இதைக் கேட்டதும் உடனடியாக போலீஸ் நாய் அங்கேயே நின்றுவிட்டது.

விளம்பரம்

போலீசார் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, ஒரு நபர் ஒரு பெண்ணை இரக்கமின்றி அடிப்பதைக் கண்டனர். உண்மையில், அந்தப் பெண் மிகவும் கடுமையாகத் தாக்கப்படிருந்தார். இன்னும் கொஞ்சம் நேரமானால் சுயநினைவை இழக்கும் தருவாயில் அந்தப் பெண் இருந்தார். நல்லவேளையாக துங்கா 2 நாயின் எச்சரிக்கையால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார். அந்தப் பெண்ணின் பெயர் ரூபா என்பது பின்னர் தெரியவந்தது.

பெண்ணை தாக்கிய ரங்கசாமி என்ற நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்கள் தேடி வந்த குற்ற்வாளி ரங்கசாமி தான் என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்தது.

விளம்பரம்

சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட சடலம் சந்தேபென்னூரைச் சேர்ந்த சந்தோஷ் (33) என்பவராவார். தனது மனைவியுடன் சந்தோஷ் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், அவரை பெட்ரோல் பங்க் அருகே உள் நெடுஞ்சாலையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார் ரங்கசாமி.

கொலை நடந்த இடத்தில் ரங்கசாமியின் வாசனையை மோப்பமிட்ட போலீஸ் நாய், அவரது வீட்டை நோக்கி ஓடி உண்மையான கொலை குற்றவாளியை கண்டுபிடித்துள்ளது.

சந்தோஷைக் கொன்ற ரங்கசாமி, தனது மனைவி ரூபாவையும் கொல்ல முடிவு செய்து சன்னபுரா என்ற கிராமத்திற்குத் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், துங்கா 2 சாதூர்யத்தால் ஒரு கொலை தடுக்கப்பட்டது. தற்போது ரூபா சிகிச்சைக்காக சந்தேபென்னூர் சமுதாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் சிறப்பாக பணியாற்றிய துங்கா-2 மற்றும் நாய்ப் படையின் முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிக்க:
எக்ஸ்ட்ரா மார்க்ஸ் வேணும்னா இத பண்ணுங்க… ராஜஸ்தான் அரசின் புதுவித முயற்சி!

சந்தேபென்னூர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 9.45 மணியளவில் எங்களுக்குத் தெரியவந்தது. அவர் பெயர் சந்தோஷ் என்றும், அவருக்கு 33 வயது என்றும் சன்னபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் விவரத்தை தெரிந்து கொண்டோம். இதில் குற்றவாளியான ரங்கசாமியும் சன்னபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் தான். இதுவரை இந்த கொலை வழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். தனது மனைவியுடன் சந்தோஷ் தகாத முறையில் தொடர்பு வைத்திருந்ததால், அவரை ரங்கசாமி கொலை செய்துள்ளார் என எங்களது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
police

You may also like

© RajTamil Network – 2024