டி20 உலகக்கோப்பை: கோலி இல்லை…அந்த வீரர்தான் அதிக ரன் அடிப்பார் – அம்பத்தி ராயுடு

by rajtamil
0 comment 39 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை எந்த வீரர் பிடிப்பார் என்று அம்பத்தி ராயுடு கணிப்பை வெளியிட்டுள்ளார்.

மும்பை,

20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஐ.சி.சி. தொடர்களில் அசத்தலாக செயல்படும் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் இந்தியா ஆகிய அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் குறித்து தங்களது கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை எந்த வீரர் பிடிப்பார் என்று அம்பத்தி ராயுடு கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அம்பத்தி ராயுடு பேசுகையில், "என்னை பொறுத்தவரை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாதான் அதிக ரன்களை விளாசி முதலிடத்தை பிடிப்பார் என்று கருதுகிறேன். ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் ரோகித் சர்மா அபாரமான பார்மில் இருந்தார். ஐ.சி.சி. தொடரில் ரோகித் சர்மா எப்படியான வீரர் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான்” என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024