தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது-சபாநாயகர் அப்பாவு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

தனிப்பட்ட விரோதங்களால் ஏற்படுகின்ற கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள் என்று அப்பாவு கூறினார்.

நாகர்கோவில்,

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார்கள். தமிழக அரசின் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சொல்ல முடியாததால் ஆங்காங்கே சில தனிப்பட்ட விரோதங்களால் ஏற்படுகின்ற கொலை குற்றங்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.

தமிழகத்தில் தொடர் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ அல்லது தொடர்ந்து பிரச்சினையோ இருப்பதாக தெரியவில்லை. மணிப்பூர் மாநிலத்தை போன்றா, இங்கு நடக்கிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம் தான். சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருப்பதால் தான் உலக அளவிலான செஸ் போட்டி இங்கு நடந்தது. இந்தியாவிலேயே அனைத்து மத வழிபாடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற மாநிலம் தமிழகம் ஆகும்" இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024