செல்போனில் ஆபாச புகைப்படங்கள்… கல்யாண ராணி விரித்த வலையில் சிக்கியவர்கள் எத்தனை பேர்?

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

கல்யாண ராணியின் செல்போனில் ஆபாச புகைப்படங்கள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளரை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த இளம்பெண் சத்யாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலையை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர்தான் புரோக்கராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வியை போலீசார் தேடி வருகிறார்கள். சத்யாவிடம் தொடர் விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

திருமணம் நடைபெற்ற 2 நாளில் சத்யாவின் செல்போனை அவரது புதுக்கணவர் பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த புகைப்படங்கள் அவரை தலை சுற்ற வைத்துள்ளது. அதில் சத்யா பல ஆண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்கள் எல்லாம் யார்? என்று கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சத்யாவின் சுயரூபம் தெரிந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கும்படி புதுமாப்பிள்ளை விட்டுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சத்யாவை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சத்யா கூறும்போது " என் குடும்பத்தை பற்றி தவறாக எழுதாதீர்கள். என் தந்தை தற்கொலை செய்து விட்டார் என்றெல்லாம் சிலர் எழுதிவிட்டார்கள். இதைவிட வேறென்ன இருக்கு சொல்லவும் செய்யவும்? காசு உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நிரூபித்துவிட்டார்கள். நான் வெளியே வந்த பின் என் மீது தவறில்லை என நிரூபிக்கும் எல்லா ஆதாரங்களையும் காட்டுகிறேன்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச்செல்வியை கண்டுபிடித்தால்தான் இதுவரை சத்யாவை எத்தனை பேருக்கு திருமணம் செய்து வைத்தார் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024