ஜாபர் சாதிக் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்!ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்த நிலையில் தற்போது தம்பிக்கு சம்மன்…ஜாபர் சாதிக்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்ட்ட ஜாபர் சாதிக் வழக்கில் அவரது சகோதரரும், துணை நடிகருமான மைதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஜாபர் சாத்திக்கின் கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்தனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்தது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரரும் துணை நடிகருமான மைதீனுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.