பஞ்சாப்பில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா பகுதியில் உள்ள லகுவால் என்ற கிராமத்தில், நேற்று இரவு வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் தீபிந்தர் சிங் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த தீபிந்தர் சிங் சமீபத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024