24
மியான்மர் அதிபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமரிடம் அதிகாரங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நேபிடா,
மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது அதிகாரங்கள் அனைத்தும் தற்காலிகமாக மியான்மர் பிரதமரும், தேசிய நிர்வாக கவுன்சில் தலைவருமான மின் ஆங் ஹ்லைங்குக்கு மாற்றப்பட்டு உள்ளன.
அதிபர் மைன்ட் ஸ்வே சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை மின் ஆங் தற்காலிக அதிபராக செயல்படுவார் எனவும், அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான பணிகளை கவனிப்பார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.