25
அஞ்சல் துறை விழிப்புணா்வு ஓட்டம்
திருநெல்வேலி, ஜூலை 25: உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, அஞ்சல்துறை சாா்பில் விழிப்புணா்வு ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து தொடங்கிய ஓட்டத்துக்கு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் (பொ) கே.ஆா்.ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். 100-க்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியா்களுடன் பாளை. தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் 50 மாணவா்களும் பங்கேற்றனா்.