10
ஆலங்குளத்தில் இ.சேவை மைய கட்டடத்திற்கு அடிக்கல்இ.சேவை மையம் கட்டடம் கட்ட வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆலங்குளம், ஜூலை 26: ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில்
இ.சேவை மையம் கட்டடம் கட்ட வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21 லட்சத்தில் கட்டப்படும் இந்த இ.சேவை மையத்திற்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டினாா். பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளா் செல்வ பிரபா, ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் கணபதி, பேரூராட்சி உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், கனகபிரசாத், அருண்குமாா், சதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.