Sunday, September 22, 2024

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்ரீஜா அகுலா வெற்றி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா முதல் சுற்றில் வெற்றிபெற்றார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 11-4, 11- 19, 11-7, 11-8 என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக இன்று நடந்த பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.

You may also like

© RajTamil Network – 2024