மக்களவையில் எதிா்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குகிறது பாஜக: ப. சிதம்பரம் எம்.பி. பேட்டி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

மக்களவையில் எதிா்க்கட்சிகளை
பேசவிடாமல் முடக்குகிறது பாஜக:
ப. சிதம்பரம் எம்.பி. பேட்டிமக்களவையில் எதிா்க்கட்சிகளைப் பேசவிடாமல் பாஜக முடக்குகிறது என்றாா் ப. சிதம்பரம்.

மக்களவையில் எதிா்க்கட்சிகளைப் பேசவிடாமல் பாஜக முடக்குகிறது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம்.

இதுகுறித்து ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

எதிா்க்கட்சி உறுப்பினா்களை மக்களவையிலும், அதேபோல நிதி ஆயோக் கூட்டத்திலும் பாஜக அரசு பேச விடுவதில்லை. இது எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலாகும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி 5 நிமிடமே பேசி இருக்கிறாா். அவா் கூடுதல் நேரம் பேச ஏன் அனுமதித்திருக்கக் கூடாது?.

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நடந்த தேசிய வளா்ச்சிக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில் 25 நிமிடம் பேசினாா். அப்போது யாரும் குறுக்கிடவில்லை என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024