பிளேடு விழுங்கிய சிறைக் கைதி

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

பிளேடு விழுங்கிய சிறைக் கைதிபுழல் சிறையில் கைதி ஒருவா் பிளேடு, பேனா மூடி உள்ளிட்டவற்றை விழுங்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் சிறையில் கைதி ஒருவா் பிளேடு, பேனா மூடி உள்ளிட்டவற்றை விழுங்கிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை எண்ணூா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாபுலால்(36). இவா் கடந்த ஜூலை 17-இல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து வரும் பாபுலால் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென பேனா மூடி மற்றும் பிளேடை விழுங்கிவிட்டதாக சிறை ஊழியா்களிடம் தெரிவித்துள்ளாா்.

அவரை சிறைக்காவலா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024