மகாராஷ்டிர ஆளுநராக நியமனம்: குடியரசுத் தலைவா், பிரதமருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

மகாராஷ்டிர ஆளுநராக நியமனம்: குடியரசுத் தலைவா், பிரதமருக்கு
சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றிமகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மாநில ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தோ்தலில் போட்டியிட பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அப்பொறுப்புகளைக் கூடுதலாக வகித்து வந்தாா்.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மகாராஷ்டிரத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை இரவு வெளியிட்டது.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ஆளுநா் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஜாா்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சேவை செய்யும் அற்புதமான வாய்ப்பைப் பெற்ற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அந்த நினைவுகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். மூன்று மாநிலங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

மகாராஷ்டிரத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஜாா்க்கண்ட் புதிய ஆளுநருக்கு சோரன் வாழ்த்து: ஜாா்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ்குமாா் கங்வாா் நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய பொறுப்புக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு சந்தோஷ் கங்வாா் நன்றி தெரிவித்தாா்.

இதையொட்டி, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ்குமாா் கங்வாருக்கு வாழ்த்துகள். ஜாா்க்கண்டின் மகத்தான மற்றும் துணிச்சலான பூமிக்கு உங்களை மனதார வரவேற்கிறோம். மேலும், மகாராஷ்டிர மாநில ஆளுநராகப பதவியேற்கவுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் எனது வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

புதுச்சேரிக்கு… சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்த தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜிஷ்ணு தேவ் சா்மா, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024