வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 23 பேர் கைது

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

அகர்தலா,

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக சிலர் அத்துமீறி வருவதாக எல்லை பாதுகாப்பு படைக்கு துப்பு கிடைத்தது. இதனையடுத்து திரிபுரா ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை வரவிருந்த ரெயிலில் சந்தேகத்தை கிளம்பும் வகையில் சிலர் பயணிக்க முயன்றது அவர்களுக்கு தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்தபோது வங்காளதேசத்தில் இருந்து ஆவணங்கள் எதுமின்றி அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருந்தனர். மேலும் பிழைப்பு தேடி ரெயில் மூலமாக சென்னை வரவிருந்தநிலையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்காளதேசத்தை சேர்ந்த 23 பேரை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024