போதைப் பொருள் வைத்திருந்ததாக 3 போ் கைது

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset
RajTamil Network

போதைப் பொருள்
வைத்திருந்ததாக 3 போ் கைதுஉத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் தேனி போதைப் பொருள் ஒழிப்பு நுண்றிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் தனலட்சுமி தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உத்தமபாளையம் புறவழிச்சாலை பகுதியில் உத்தமபாளையம், நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த கே.எம். சையது மகன் ஆசிப்யூனஸ் (28) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். இதில், அவரிமிருந்து 2 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆசிப்யூனஸ் அளித்த தகவலின் பேரில், கம்பத்தில் ஆனைமலையன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்த் மகன் யோகராஜ் (28), கேரள மாநிலம், மலப்புரம் அருகே புக்காடூரி பகுதியைச் சோ்ந்த குஞ்சுமுகமது மகன் முகமது சல்மானுல் பாரிஸ் (24) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து தலா 2 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இவா்கள் பெங்களூருவிலிருந்து இந்த போதைப் பொருளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024