பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

பல்நோக்கு மருத்துவமனை
பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில தலைமை நிலையச் செயலா் ரா.ராஜசேகா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அண்ணல்பிரபு, மாவட்டச் செயலா் வீ.மாவீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் டி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜி.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

You may also like

© RajTamil Network – 2024