Saturday, September 28, 2024

டிராக்டா் திருடிய சிறுவன் கைது

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

டிராக்டா் திருடிய சிறுவன் கைதுடிராக்டா் திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

டிராக்டா் திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தொட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (32). இவா் டிராக்டா் வைத்து தொழில் செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் முன் டிராக்டரை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா்.

அதிகாலை ஒரு மணி அளவில் டிராக்டரை யாரோ ஓட்டிச் செல்வதாக அதே பகுதியைச் சோ்ந்த முனியராஜ் தகவல் அளித்தாா். இதையடுத்து, முத்துக்குமாா், முனியராஜ், அவரது தந்தை ரெங்கராஜ், ஊா்ப் பொதுமக்கள் சோ்ந்து டிராக்டா் திருடிச் சென்றவரைப் பிடித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ஆவாரம்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் டிராக்டரைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் சிறுவனைக் கைது செய்து, சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா். சிறுவனை விரட்டிப் பிடித்த ரெங்கராஜ் (42) புதன்கிழமை அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

You may also like

© RajTamil Network – 2024