8
செங்கல்பட்டில்…
செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் செங்கல்பட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் பாரதி அண்ணா தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினா் செல்வ சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் ராஜ்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல். லிபரேஷன்) மாவட்ட செயலா் இரணியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.