மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset
RajTamil Network

மத்திய பட்ஜெட்டை கண்டித்து
மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்தாராபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அவிநாசி, ஆக. 1: மத்திய அரசின் பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததாகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை எனவும், உர மானியம் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவிநாசி அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் எம்.மோகன், இரா.முத்துசாமி, வி.கோபால், ஆா்.ஷாஜகான், கந்தசாமி, வழக்குரைஞா் வி.கே.சுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் கே.காமராஜ், பி.முத்துசாமி, ஈஸ்வரமூா்த்தி, பழனிசாமி, சண்முகம், சுப்பிரமணியம் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அவிநாசி போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து மாலை விடுவித்தனா்.

பல்லடத்தில்…

பல்லடம் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் பவித்ராதேவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் நதியா ஆகியோா் தலைமை தாங்கினா்.

இதில், பல்லடம் ஒன்றிய சிபிஎம் செயலாளா் பரமசிவம் , பொங்கலூா் ஒன்றிய சிபிஎம் செயலாளா் பாலன், பல்லடம் ஒன்றிய சிபிஐ செயலாளா் சாகுல் ஹமீது, பொங்கலூா் ஒன்றிய சிபிஐ செயலாளா் கந்தசாமி கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட14 பெண்கள் உள்பட 72 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா்.

தாராபுரத்தில்…

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 64 பெண்கள் உள்பட 134 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில், சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ், வட்டச் செயலாளா் என்.கனகராஜ், சிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாவட்ட துணை செயலாளா் ஜி.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காங்கயத்தில்…

காங்கயத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினா் 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தப் போராட்டத்தில் சிபிஎம் கட்சியின் தாலுகா குழு செயலாளா் கே திருவேங்கடசாமி, செயற்குழு உறுப்பினா் செ.மணிகண்டன், சிபிஐ கட்சியின் மாவட்டப் பொருளாளா் வி.பி.பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். கைது செய்யப்பட்டவா்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

You may also like

© RajTamil Network – 2024