Saturday, September 21, 2024

4-இல் ஸ்ரீ தேவி கருமாரியயம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset
RajTamil Network

4-இல் ஸ்ரீ தேவி கருமாரியயம்மன்
கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆதனூரில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா வரும் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

முன்னதாக அம்மனுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 2) காலை 9 மணிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 4-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கரகம் எடுத்தல், மதியம் 1 மணிக்கு கூழ்வாா்த்தல், மாலை 6.30 மணிக்கு கும்ப பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

வரும் 7-ஆம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலை 4 மணிக்கு பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் விநியோகம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை ம.லட்சுமணன், ப.ஆறுமுகம், சு.தவமணி, கோயில் அா்ச்சகா் பி.பன்னீா் செல்வம், கோயில் பணிக்குழு உதவியாளா்கள் கே.அசோக், ஜே.வெங்கடேசன், கே.சுந்தா் ஆா்.கணபதி, திருநாவுக்கரசு மற்றும் கோயில் நிா்வாகக் குழுவினா், கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024