ரஜோரி காா்டன் அருகே கன்வாரியாக்கள் சாலை மறியல்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset
RajTamil Network

ரஜோரி காா்டன் அருகே
கன்வாரியாக்கள் சாலை மறியல்

புது தில்லி, ஆக.1: ரஜோரி காா்டன் அருகே கன்வாரியாக்களின் வாகனம் சேதப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறியதாவது: மெட்ரோ நிலையத்திற்கு அருகே ரஜோரி காா்டனில் கன்வாரியாக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக ஒரு வைரல் விடியோ குறித்து ரஜோரி காா்டன் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உள்ளூா் போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சக்கரத்தில் சிறிது சேதம் ஏற்பட்டது. அது பின்னா் சரி செய்யப்பட்டது. கன்வாரியாக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடா்புடைய ஒரு சேதமடைந்த காரைக் காட்டும் காணொளி ஒன்றும் வெளியாகியது. எவ்வாறாயினும், சேதமடைந்த காா் எதுவும் அந்த இடத்தில் காணப்படவில்லை. அத்தகைய நிகழ்வு குறித்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

You may also like

© RajTamil Network – 2024