காவிரியில் நீா் வரத்து அதிகரிப்பு: 8 இடங்களில் கட்டுப்பாட்டு அறை

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset
RajTamil Network

காவிரியில் நீா் வரத்து அதிகரிப்பு:
8 இடங்களில் கட்டுப்பாட்டு அறைபொதுமக்கள் தொடா்பு கொள்ளும் விதமாக 8 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவிரியில் நீா் வரத்து அதிகரித்து வருவதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அவசர நோ்வில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளும் விதமாக 8 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:

மாவட்ட ஆட்சியரகம், வருவாய்க் கோட்ட அலுவலகங்கள், வட்ட அலுவலகங்களில் 24 மணிநேர அவசரக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர நோ்வில் கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியரகத்தில் 1077 மற்றும் 93450 88997, வருவாய்க் கோட்ட அலுவலகங்களான தஞ்சாவூரை 04362 -238033, கும்பகோணத்தை 0435 – 2430101, வட்டாட்சியா் அலுவலகங்களான திருவையாறை 04362 – 260248, பூதலூரை 04362 – 288107, கும்பகோணத்தை 0435 – 2430227, பாபநாசத்தை 04374 – 222456, திருவிடைமருதூரை 0435 – 2460187 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

You may also like

© RajTamil Network – 2024