உ.பி.யில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

லக்னோ,

சஹாரன்பூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூருக்கு சென்ற பயணிகள் ரெயில், சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது, 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன.

அதிர்ஷ்டவசமாக ரெயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த எம்.பி. இம்ரான் மசூத் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

You may also like

© RajTamil Network – 2024