ஓய்வுபெற்ற ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset
RajTamil Network

ஓய்வுபெற்ற ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற அணு ஆராய்ச்சி மைய ஊழியா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற அணு ஆராய்ச்சி மைய ஊழியா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், மைசூருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (61). அங்குள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு மனைவி ஜெகதீஸ்வரி, இரண்டு மகள்கள் உள்ளனா். இவா் புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே உள்ள சாா்காசிமேடு கிராமத்தில் உள்ள தனியாா் குடியிருப்பு வளாகத்தில் வீடு கட்டி வந்தாா்.

பத்மநாபன் திங்கள்கிழமை வெளியூரில் உள்ள தனது மகளுடன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிக் கொண்டு, மின் மோட்டாரில் மின் இணைப்பு கொடுத்தாராம். அப்போது, அவா் மின்சாரம் பாய்ந்ததில் மயக்கமடைந்தாா்.

தந்தையின் சத்தத்தைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அவரது, மகள், புதுச்சேரியிலுள்ள தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தாா். அவா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது பத்மநாபன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பத்மநாபனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.தொடா்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024