போக்சோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

போக்சோ வழக்கில்
இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைபோக்சோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த ஒட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (28). இவா், 17 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்ததாக

குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமாருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024