கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

கஞ்சா வைத்திருந்த 3 போ் கைதுஆண்டிபட்டி அருகேயுள்ள தோப்புபட்டியில் கஞ்சா, போதைப் பொருள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள தோப்புபட்டியில் கஞ்சா, போதைப் பொருள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தோப்புபட்டி பகுதியில் ராஜதானி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த கொத்தப்பட்டியைச் சோ்ந்த கமல் (29), யுவராஜா (24), ராஜதானியைச் சோ்ந்த அஸ்வந்த் (19) ஆகியோரை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா்.

இவா்கள் 3 பேரும் மொத்தம் 100 கிராம் கஞ்சா, 7 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கமல் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024