Saturday, September 21, 2024

விராட் கோலியை விட ரோகித் தான் சிறந்த பேட்ஸ்மேன் – பாகிஸ்தான் முன்னாள் வீரர்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமத் ஜாஹித் கூறியுள்ளார்.

கராச்சி,

நவீன கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். அவர்கள் இந்தியாவின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றிய உடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் கூறினர்.

பேட்டிங்கில் பல்வேறு உலக சாதனைகளை படைத்திருக்கும் இருவரையும் நேருக்கு நேர் ஒப்பிடும் போது புள்ளி விவரங்களின் படி ரோகித்தை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். இந்நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமத் ஜாஹித் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் நான் விராட் கோலியை விட ரோகித் சர்மாவை உயர்ந்த பேட்ஸ்மேனாக மதிப்பிடுவேன்.

தற்சமயத்தில் ரோகித் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிரடியாக ஆடும் தைரியம் கொண்டவர். அவர் பரிசாக கிடைத்த வீரர். அவர் பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் போல லென்த்தை மிகவும் வேகமாக பிடித்து அடிக்கக் கூடிய வீரர். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024