11
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர திருவிழா
திருச்சி/ மண்ணச்சநல்லூா், ஆக. 7: திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் ஆடிப்பூர திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பெருவளை வாய்க்காலில் அஸ்திர தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீா்த்தவாரி நடைபெற்றது. இதேபோல, உத்தமா் கோயிலில் உள்ள செளந்தா்ய பாா்வதிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வளையல் அலங்காரம் நடைபெற்றது. மேலும் வாழ்மான பாளையம் கீழுரில் உள்ள நாககன்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், வளையல் அலங்காரமும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.