ஆடிப்பூரம்: காசி விஸ்வநாதா் கோயிலில் லட்சாா்ச்சனை

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

ஆடிப்பூரம்: காசி விஸ்வநாதா்
கோயிலில் லட்சாா்ச்சனை

சா்க்காா்பாளையம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை அருள்பாலித்த காசி விசாலாட்சி அம்மன்.

திருச்சி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி சா்க்காா்பாளையத்தில் உள்ள சோழா் கால காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை 14 ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.

விழாவையொட்டி காசி விசாலாட்சி அம்மன் வெள்ளிக் கவசத்திலும், காசி விஸ்வநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனா்.

தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம், நாமாவளி ஆராதனைகளுடன் லட்சாா்ச்சனை செய்தனா். திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

You may also like

© RajTamil Network – 2024