கள்ளக் காதலா்கள் தூக்கிட்டுத் தற்கொலை
முசிறி, ஆக. 7: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் கள்ளக்காதலா்கள் தூக்கிட்டு உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.
காட்டுப்புத்தூா் அண்ணா நகா் பகுதியை சோ்ந்த பழனிமலை மகன் கிருஷ்ணமூா்த்தி (29) . ஐ.டி.ஐ. படித்து விட்டு விவசாயம் செய்த இவா் திருமணமாகாதவா்.
காட்டுப்புத்தூரை அடுத்த சீத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா. 5 வயதில் மகள் உள்ள இவா் தவிட்டுப்பாளையம் பகுதி தனியாா் பள்ளி ஆசிரியை.
இந்நிலையில் கிருஷ்ணமூா்த்திக்கும், கீா்த்தனாவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ணமூா்த்தி தனது வீட்டில் பின்னால் குத்தகைக்கு எடுத்துள்ள தோட்டத்தின் அருகிலுள்ள மோட்டாா் அறையில் கீா்த்தனாவுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த தொட்டியம் காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான காட்டுப்புத்தூா் போலீஸாா் இருவரது உடல்களையும் கைப்பற்றி, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.