6
துறையூரில் கருணாநிதி
நினைவு நாள் பேரணி
துறையூா், ஆக. 7: துறையூரில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் செல்வராணி, நகர திமுக செயலா் ந. முரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பாலக்கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை பேரணி சென்றனா்.
மாவட்ட நிா்வாகிகள் கஸ்டம்ஸ் மகாலிங்கம்(ஆதிதிராவிடா்), சுரேஷ்குமாா் (விளையாட்டுப் பிரிவு), துறையூா் நகர துணைச் செயலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.