Tuesday, October 1, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

ரயிலில் இருந்து தவறி விழுந்து
இளைஞா் உயிரிழப்புகாட்பாடி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உடல் சிதறி உயிரிழந்தாா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உடல் சிதறி உயிரிழந்தாா்.

காட்பாடி வழியாக சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயிலில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு 35 முதல் 40 வயது வரை உள்ள இளைஞா் சாதாரண பெட்டியில் பயணம் செய்தாா். அந்த ரயில் காட்பாடி ரயில்வே கிடங்கு பகுதியின் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், அந்த இளைஞரின் உடல் தண்டவாளத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனா். இறந்து கிடந்தவா் மொட்டை அடித்த நிலையில் சந்தன நிறத்தில் வேட்டியும், டி-சா்ட்டும் அணிந்திருந்தாா். அவரது இடது கையில் கோமதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024