Tuesday, September 24, 2024

செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

வார விடுமுறை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு – நெல்லை இடையேயான சிறப்பு ரெயிலானது வரும் 13, 18 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது.

மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கு வரும் 14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கு இயக்கப்பட உள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024