Saturday, September 21, 2024

13 மாதங்களில் 9 பெண்கள் படுகொலை..சீரியல் கில்லர் பரபரப்பு வாக்குமூலம்!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

9 பெண்களை படுகொலை செய்த சீரியல் கில்லர்.. சித்தி கொடுமையால் விரக்தி.. பரபரப்பு வாக்குமூலம்..!சீரியல் கில்லர்

சீரியல் கில்லர்

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதியில் ஒன்றில் கடந்த 13 மாதங்களில் சுமார் 9 பெண்கள் கிட்டத்தட்ட ஒரே பாணியில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சீரியல் கில்லர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

ஷாஹி, ஷீஷ்கர் மற்றும் ஷெர்கர் காவல் நிலையப் பகுதிகளில் கடந்த ஆண்டு 40-65 வயதுக்குட்பட்ட சுமார் 8 பெண்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்தாண்டு ஜூலை வரை மொத்தம் 11 கொலைகள் நடந்துள்ளன. இதில் 9 கொலைகள் ஒரே மாதிரி நடந்துள்ளதால் போலீசார் விசாரணை கோணத்தை மாற்றினர். இதில் பெரும்பாலான பெண்கள் மீது பாலியல் வன்முறை நடக்கவில்லை. இந்த வழக்குக்காக 22 குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு தலாஷ் என்று பெயரிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

விளம்பரம்

தொடர்ந்து விசாரணையில், கொலைகளை செய்தது பரேலியை சேர்ந்த குல்தீப் குமார் கங்க்வார் என்பவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கினர். அதில் பல்வேறு பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய போலீசார், குல்தீப் குமார் சிறுவயதில் அவருடைய தந்தை இரண்டாவதாக திருமணம் செய்ததாக தெரிகிறது. சித்தியின் கொடுமைகளை அனுபவித்து வந்த அவர் மனரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் இவருக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனைவியும் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, பெண்கள் மீது வெறுப்பை கக்க தொடங்கிவிட்டார். குடி போதை மற்றும் மன விரக்தியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வயல்வெளியில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.

அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, கழுத்தை நெரித்து கொன்றார். அந்த பெண்ணின் புடவையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இந்த வழக்கில் சிக்காததால் மன நிம்மதியாக உலாவி வந்த சைக்கோ கில்லர் தன் கொலை வேட்டையை தொடங்கினார். ஒவ்வொரு கொலை முடிந்த பின்பு அதை கொண்டாடும் வகையில், அவர்களின் லிப்ஸ்டிக், பொட்டு, ஆபரணங்களை தன்னுடன் எடுத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தன் சித்தி மற்றும் மனைவியின் கொடுமைகளால் பெண்கள் மீது விரக்தி அடைந்து அதிகளவு பெண்களை கொல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மொபைல் போனும் பயன்படுத்தாமல் இருந்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News

You may also like

© RajTamil Network – 2024