Tuesday, September 24, 2024

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும், வரும் 14 மற்றும் 15-ந்தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024