பிரசித்தி பெற்ற சிவாலயங்களும் தரிசன பலன்களும்..!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும். திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

ஆன்மிகத்திலும் இறைவழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் வேண்டுகோளாக வைத்து வழிபாடு நடத்துவதும், பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம். அவ்வகையில், பிரசித்தி பெற்ற சைவ தலங்களில் எந்த தலத்திற்குச் சென்று எந்த இறைவனை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

திருக்கருக்குடி கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவனை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும். திருக்கருவேலி கோவில் சென்று வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம், வறுமை நீங்கும். திருவழுந்தூர் சென்று அங்குள்ள இறைவனை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.

திருப்பராய்துறை கோவிலுக்கு சென்று வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம். திருநெடுங்களம் கோவிலுக்கு சென்றால் தீரா துயர் தீரும். திருவெறும்பூர் கோவிலில் உள்ள சிவனை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம். திருப்பைஞ்ஞீலி சென்று ஞீலிவனேசுவரரை வணங்கினால் எம பயம் விலகும். திருவையாறு கோவில் சென்று வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.

திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும். திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும். திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும். திருவெண்காடு சென்று அங்கு வீற்றிருக்கும் ஈஸ்வரனை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.

திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும். திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும். திருவாலவாய் கோவில் சென்றால் நட்சத்திர தோஷம் நீங்கும். திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும். திருவாடானை தலத்திற்கு சென்று வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.

திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும். திருப்பாதிரிபுலியூர் தலத்தில் உள்ள பாடலீஸ்வரரை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும். திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும். திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

You may also like

© RajTamil Network – 2024