பஞ்சாபில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

பஞ்சாபில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
பஞ்சாபில் ஆற்றைக் கடக்கும் போது வெள்ள நீர் காரை அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர்.

பஞ்சாபில் ஆற்றைக் கடக்கும் போது வெள்ள நீர் காரை அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர்.

பஞ்சாபின் பெய்த கனமழையின் காரணமாக பருவகால ஆறான ஜய்ஜான் சோவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பஞ்சாபில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் இன்று சென்றுகொண்டிருந்தனர்.

இவர்களுடைய கார், ஜய்ஜான் சோ ஆற்றை கடக்கும்போது, ​​காரை வெள்ளநீர் அடித்துச்சென்றது. ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதை கண்ட உள்ளூர்வாசிகள் சிலர் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று ஓட்டுநரை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்துள்ளார்.

இருப்பினும், அதில் தீபக் பாட்டியா என்வரை மீட்ட உள்ளூர்வாசிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியாகினர். இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது இந்த பதைபதைக்கும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024