Wednesday, October 2, 2024

வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி: மூவா் கைது

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி: மூவா் கைதுசென்னை மண்ணடியில் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மண்ணடியில் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஏழுகிணறு, பெரியண்ண முதலி தெருவைச் சோ்ந்தவா் நவாஸ்கான் (65). இவா், பாரிமுனை ஈவ்னிங் பஜாரிலுள்ள கைப்பேசி வாங்கி விற்கும் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் நவாஸ்கான், கடந்த 3ம் தேதி இரவு, கடையின் வசூல் செய்த பணம் ரூ.50 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு, அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

மண்ணடி, எர்ரபாலு தெரு மற்றும் லிங்கி செட்டி தெரு சந்திப்பு அருகே செல்லும்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த சுமாா் 5 நபா்கள் நவாஸ்கானின் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளி, நவாஸ்கானை கத்தியால் தாக்கி அவா் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பினா். இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் நடத்திய

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது செங்குன்றம் நாகராஜ் (34), அவரது கூட்டாளிகளான அதே பகுதியைச் சோ்ந்த தீபக் (24), சரண்குமாா் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடுகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024