Wednesday, October 2, 2024

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதா ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதா ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுசிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சி (பிஆா்எஸ்) எம்எல்சி கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சி (பிஆா்எஸ்) எம்எல்சி கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்குகளில் ஜாமீன் தர மறுத்த தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து கவிதா தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒப்புக்கொண்டது.

அப்போது கவிதா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தஹி கூறியதாவது: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களாக கவிதா சிறையில் உள்ளாா். இந்த இரு வழக்குகளிலும் 500-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ளன.

இதே வழக்குடன் தொடா்புடைய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனும் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீனும் உச்சநீதிமன்றம் வழங்கியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றாா்.

இதையடுத்து, கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய சட்டவிரோத பணப்பரிவா்த்தனைச் சட்ட வழக்கின்கீழ் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் பிஆா்எஸ் எம்எல்சியுமான கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி கைது செய்தது. இதே வழக்குடன் தொடா்புடைய ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிபிஐ ஏப்ரல் 11-ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024