திருக்கோளூர் பெண் பிள்ளை சொன்ன 81 வாக்கியங்கள் என்ன?

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

புராண இதிகாசங்களுடன் தொடர்புடைய வைஷ்ணவ அடியார்களின் பக்தியை விவரிக்கும் வகையில், திருக்கோளூர் பெண் கூறிய வாக்கியங்கள் அமைந்துள்ளன.

சுவாமி ராமானுஜரிடம், திருக்கோளூர் பெண் சொன்ன 81 வாக்கியங்கள் 'திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்' என போற்றப்படுகிறது. திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் என்றும் சொல்வார்கள். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற புராண இதிகாசங்களுடன் தொடர்புடைய வைஷ்ணவ அடியார்களின் பக்தியை விவரிக்கும் வகையில், கேள்வி வடிவில் திருக்கோளூர் பெண் கூறிய அந்த வாக்கியங்களை பார்ப்போம்.

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

2. அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே

3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே

4. தசமுகனைக் செற்றேனோ பிராட்டியைப் போலே

5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

6. பிணவிருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

7. தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

9. மூன்றெழுத்து சொன்னேனோ சத்ர பந்துவைப் போலே

10. முதல் அடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே

12. எம் பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே

13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே

14. அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே

15. ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே

16. யான் சத்யம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே

17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே

18. அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே

19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

20. அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

21. தேவு மற்றறியேனோ மதுரகவியார் போலே

22. தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே

23. ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே

24. ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே

25. அனுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே

26. அவல்பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே

27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே

28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே

29. கர்மத்தால் பெற்றேனோ சனகரைப் போலே

30. கடித்து அவனை கண்டேனோ திருமங்கையார் போலே

31. குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே

32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே

33. இளைப்பு விடாய்த் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே

34. இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே

35. இருமன்னர் பெற்றேனோ வால்மீகரைப் போலே

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே

37. அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே

38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே

39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே

40. அடிவாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே

41. மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே

42. மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே

43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே

44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே

45. வைத்தவிடத்து இருந்தேனோ பரதனைப் போலே

46. வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே

47. அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமானைப் போலே

48. அரக்கனுடன் பொருதேனோ பெரிய வுடையாரைப் போலே

49. இக்கரைக்கே சென்றேனோ விபீஷணரைப் போலே

50. இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே

51. இங்கும் உண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே

52. இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே

53. காட்டுக்குப் போனேனோ பெருமானைப் போலே

54. கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே

55. இருகையும் விட்டேனோ திரவுபதியைப் போலே

56. இங்குப் பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே

57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே

58. நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர் நம்பியைப் போலே

59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே

60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே

61. அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே

63. அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே

64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே

65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வ வாரியாண்டானைப் போலே

66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே

67. அனுகூலம் சொன்னேனோ மாலியவானைப் போலே

68. கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே

69. கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே

70. சுற்றிக் கிடந்தேனோ திருமாலை யாண்டான் போலே

71. சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே

72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே

73. உடம்பை வெறுத்தேனோ திருநரையூராரைப் போலே

74. என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே

75. யான் சிறியன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே

76. நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே

77. நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே

78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

79. வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே

80. தோள்காட்டி வந்தேனோ பட்டரைப் போலே

81. துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே.

You may also like

© RajTamil Network – 2024